Thursday, March 18, 2010

அறிமுக காண்டம்- மலரத் துடிக்கும் மொட்டு ஒன்று


சுருக்கமாய்ச் சொல்வதானால்
என்னை எனக்கே புரியவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை???

வெளியே பிறருக்குத் தெரிகிற எனக்கும், உள்ளே எனக்கு தெரிகிற எனக்கும், நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற எனக்கும் நடக்கும் கருத்து மோதல்களில் ஏற்படும் வெற்றி தோல்வியின் அடிப்படையில் காலத்தோடு கனிந்து கொண்டு இருக்கிறேன் என்று மட்டுமே எனக்கு புரிகிறது

வலைப்பதிவுகளில் நான் யார் எனில்
ரஜினி படம் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ஆகவும்,
டெண்டுல்கர் விளையாடிப் பார்த்தல் Master Blaster ஆகவும்,
வைரமுத்து கவிதை படித்தால் கவிப் பேரரசாகவும்,
சக மாணவன் முதல் Rank இல் தேறினால் மாண்பு மிகு மாணவனாயும் ,
அழகான Figure இடம் Kiss வாங்கும் Boy friend ஐ பார்த்தால் கலாப காதலனாயும்
மாறிவிடத் துடிக்கும் ஒரு சராசரி இளைஞனே நான்!!!

நல்ல வலைப் பதிவுகளையும் நல்ல வலைப்பதிவர்களின் படைப்புக்களையும் ரசித்து ஒரு நல்ல படைப்பாளியாய் மாற துடிக்கும் ஒரு புதிய வலைப் பூவே நான். இந்த பூ வாடாமல் மணம் பரப்புவது உங்கள் கைகளில் தான் உள்ளது வாசக நண்பர்களே! (தயவு செய்து இந்த பூவைக் கிள்ளி விடாதீர்கள்....ஹி..ஹி...)

இப்போதைக்கு இவ்வளவும் போதும் நண்பர்களே, உங்களை விட என்னை பற்றி தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன் நண்பர்களே. தெரிந்து கொண்டால் பகிர்ந்து கொள்கிறேன் இனி வரும் காலங்களில்..... :-))

No comments:

Post a Comment