Tuesday, March 23, 2010

"யாதொன்றும் இல்லை நோக்கம் -வலைப் பூவை நிரப்புவதைத் தவிர"

இன்னும் ஆறே நாளில எக்ஸாம். எக்ஸாம் டைம்லயாவது படிங்கடா எண்டு கம்பஸ்ல லீவும் விட்டாச்சு. கொஞ்ச நாளா படிக்கிற மூட் இல்ல. ம்ம்ம்ம் உனக்கு எப்பதான் அது இருந்திருக்கு எண்டு மிஸ்டர் மனச்சாட்சி கேட்கிறார். அவர் கிடக்கிறார். அவர் அப்பிடிதான். மனச்சாட்சிய எல்லாம் பார்த்திட்டிருந்தா பொழைப்பு ஓடுமா என்ன? இப்ப கொஞ்ச நாளா பதிவு எழுதிற மூட். உடனவே எழுதிடணும். விட்டா பிடிக்க முடியாது. அட நான் மூட பற்றி சொன்னனுங்க..இதுக்க நீங்க வேற.. ரொம்பத்த்த்தான் குசும்பு!!!

பர பரப்பா பேசி, பப்பறப்பா என ஊடகங்கள் எல்லாம் தணிக்கை இல்லாமலே ஒளிபரப்பு செய்து, அட அதுதாங்க நம்ம நித்தியானந்தா மேட்டர், இப்ப தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க தொடக்கி இருக்காங்க மீடியா காரனுக! சும்மா சொல்லக் கூடாது, சும்மா பிரிச்சு மேஞ்சிடாங்கல்ல. அப்பிடியே அடிச்சு, துவைச்சு, காய வைச்சு, அயன் கூட பண்ணிடானுங்க எண்டா பாருங்களேன்.
பிரமச்சாரி எண்டு சொல்லிக்கொண்டு அப்படி செஞ்சது நித்தியானந்தர்ட தப்புதாண்ணே! ஆனால் மீடியா காரனுக அப்பிடி பண்ணினது தான் நம்ம மைன்ட்ல ரொம்ப ரொம்ப தப்பா படுது.

நித்தியானந்தா பிரமச்சாரி எண்டாரு, போதனை செய்தாரு, பொம்பிளை சாவகாசம் வச்சிக்கிட்டாரு...நீங்க பின்னி பெடல் எடுத்தீங்க சரி. நடிகை ரஞ்சிதா உங்களுக்கு என்ன பண்ணினா? தானும் பிரமச்சரியம் பூண்டிருக்கேன் எண்டாங்களா, போதனை பண்ணினாங்களா, இல்லை பஜனைக்கு வாவென்று தான் அழைத்தாங்களா??? இல்லையே!

அட விபச்சாராம் தானே தப்பு, விருப்பத்தோட நடந்தா தப்புன்னு சட்டம் சொல்லுதா??? ஊடகங்கள் கூட அப்பிடித் தானே சொல்லிச்சு. இந்த வீடியோவை வைத்து அவங்க மேல சட்டப்படி அக்சன் எடுக்க முடியாது எண்டு. அப்ப ரஞ்சிதா மேல சட்டப்படி தப்பு இல்லைல. அப்புறம் ஏன்??? நீங்க செய்த வியாபாரம்தான் உண்மையில் விபச்சாரம். "ஊடக விபச்சாரம்". நடிகை ரஞ்சிதாவும்  ஒரு பொம்பிளை தானே! உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தா அதையும் எடுத்து சுவாமியாரின் காம லீலை எண்டு படம் ஒடுவீங்களா? என்னை மாதிரியே எத்தினை நாய் நாக்க தொங்க போட்டிட்டு ரசிச்சு பார்த்திருக்கும் தெரியுமா???  


சரி வீடியோ எடுத்தீங்கல்ல. நேர கோர்ட்ற்கு போங்க. சரியான ஆதாரங்களை சமர்பியுங்க. மீதிய கோர்ட் முடிவு பண்ணட்டும். அது சமுதாயத்திகு நீங்க செய்த சேவையா இருக்கட்டுமே! சாமிய தூக்கி உள்ள போட்டால் மூட நம்பிக்கையோட அலை(ழி)யுற சனத்திற்கு அவரோட வேஷம் புரிஞ்சிட்டு போது!  ஒளிபரப்பு செய்து அம்பலப் படுத்தாட்ட்டி ஏதாவது வம்பு தும்பு பண்ணி தப்பிச்சிருவான் சாமி எண்டுறியளா? அதுக்கு சப்போர்ட் பண்ண போறது யார் சார்? "கரு+நா(ய்)+நிதி" போன்ற அரசியல்வாதிகள் தானே. ஆனால் எல்லாரும் ஒண்டா சேர்ந்து பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நடத்துங்க.  முதல்ல நீங்க திருந்துங்கயா. அப்புறம் மக்களோட மூட நம்பிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.  


ஊர் முழுதும் எதனை கற்பழிப்புகள் நடக்குது. செஞ்சதும் இல்லாமா படம் புடிச்சு இன்டெர்நெட்ல வேற போடுறாங்க. அதுக்கின்னே எத்தினை கும்பல் திரியுது. அவங்களையும் இப்படி கொஞ்சம் கிழிக்கிறது. செய்யமாட்டீங்க. ஏன்னா, ஒண்டு உங்களுக்கு பிசினஸ் இல்லை. ரெண்டு அவனுக உங்க அடிவயித்தில சொருகிட்டு போயிட்டே இருப்பாங்கற பயம். 

யரோ சொன்னாங்க நடிகை ரஞ்சிதா புருஷன் ஆமில இருக்காராம் எண்டு. உங்க நாட்டைக் காப்பாத்த தானே அந்த மனுஷன் எல்லைல நிற்கிறான். அவன் குடும்ப மானத்தை காப்பாத்த உங்களால முடியலியே! அந்த மனுஷன் அங்க நிற்கிறதால தானே அவன் பெண்டாட்டிக்கு இந்த நிலை! அவனோட மன நிலை எப்பிடி இருக்கும் எண்டு ஜோசித்து பார்த்தீங்களா? இது மாதிரி எத்தினை ஆமிக்காரன் பெண்டாட்டிங்க. இப்ப எல்லைல நிற்கிற ஒவ்வொரு புருஷன் நினைவும் என் பெண்ட்டாட்டி எந்த ஆசிரமத்தில பஜனைக்கு போறாளோ எண்ட சிந்தனைல இருக்குமா இல்ல நாட்டு எல்லைல இருக்குமா??? அதுசரி, நவராத்திரி தினத்தை முன்னிட்டு உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக உன்னை கொடு என்னை தருவேன் ஒளிபரப்புற பார்ட்டி தானே நீங்க. உங்களுக்கு எங்க இதெல்லாம் புரியப் போது.


"கதவைத் திற காற்று வரட்டும்" அவரோட புத்தகத்தை படிக்காமலே கிழி கிழி எண்டு முடிஞ்சவரைக்கும் கிழிச்சு தள்ளிட்டீங்க. நித்யானந்தா என்ற சுவாமி வேசத்தில் ஒளித்திருந்தது ஒரு ஆசாமிதான். மறுப்பில்லை. அட ஏன் சார் நித்தயானந்தா என்ற தனி மனிதனை மட்டும் பார்க்கிறீங்க. கருத்துக்களை மட்டும் பார்க்கலாமே! தயவு செய்து நித்யானந்தாவிலிருந்து கடவுளை நோக்கி போகாதீங்க. நித்யானந்தாவின் கருத்துக்களில் இருந்து கடவுள் தன்மையை நோக்கி போய் பாருங்க. வெறும் பன்னாடைகளா இல்லாம கொஞ்சம் அன்னமாயும் இருங்க . அங்கேயும் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நல்ல கருத்துக்கள் நாசமா போயிட கூடாது. எனக்கு புரிந்தளவில் கடவுள் தன்மையை உணர்கிறபோது கடவுளை உணரலாம் என்பதே ஓஷோவின் கருத்து.  

கருத்து சொன்னவனே கடைப் பிடிக்காம கம்பி நீட்டிட்டான். ம்ம்ம் இதில நாம் வேற பின் பற்றணுமாக்கும். இதான் இதான் சார் நாம் எல்லார் கிட்டயும் இருக்கிற மிக பெரிய தப்பு. மற்றவன் செய்யட்டும் அப்புறம் நான் செய்கிறேன் என்பது. முதல்ல நீங்க செய்யுங்க, அடுத்தவன் தானாத் தொடங்குவான்.

கருத்து சொன்னவனே ஒரு கஸ்மாலம்...இதில கருத்த கவனியுங்க எண்டுது ஒரு பேமானி எண்டு கடுப்பாகாதீங்க.  வாஸ்தவம் தான். அப்பிடி பார்த்தா கீதையை தூக்கி அப்பிடியே நெருப்பில போட்டிருங்க. கவியரசர் கவிதைகளை எங்காச்சும் தூரவா கொண்டே ஒரு குளத்திலையோ குட்டையிலையோ போடுங்க. ஆமா சார், நீராடும் தோழி பெண்களின் மேலாடையை இழுத்து ரசித்தவன் தான் நம்ம கீதை சொன்ன கண்ணன். "ஒரு  கையில்  மதுவும்  மறு  கையில் மாதுவும் இல்லாமல் நான் மாண்டு போனால் நீ பிறந்ததன் அர்த்தம் என்னவென்றே இறைவன் கேட்பான்" என்று பாடி கொஞ்ச காலம் வாழ்ந்தும் காட்டியவர்தான் தத்துவ பாதை சொன்ன கண்ணதாசன்.

தனது அந்தரங்களின் மென்மையும் மேன்மையும் புரியாதவனே பிறரின் அந்தரங்களை அலட்சியப் படுத்துகிறான், அம்பலப் படுத்துகிறான் என்பது பாலகுமாரன் சாரோட மிக அற்புதமான் வரிகள். இதை கொஞ்சம் நிதானமாய் சிந்தித்து பாருங்கள். நிதானமாய் புரிந்து கொள்ளுங்கள்.

 நீ யாருடா பெரிய பருப்பு? அப்ப தப்பு செஞ்சவனை தட்டிக் கேட்க வேணாமா? தண்டிக்க வேணாமா? நடிகை ரஞ்சிதா செஞ்சது சரியா? 


நான் ஒண்ணும் நித்யானந்தருக்கு ஜால்ராவும் இல்லை. நடிகை ரஞ்சிதாவிற்கு வக்காலத்தும் இல்லை. ஆனால் யாரு சார் நீங்க, தட்டிக் கேட்கவும் தண்டால் எடுக்கவும். உங்க நெஞ்சில கை வைத்து உறுதியா சொல்லுங்க பார்ப்பம் எங்க படுக்கை அறையில இப்படி ஒரு கேமரா ஒளிச்சு வச்சிருந்தால் இப்பிடி ஒரு படம் எடுத்திருக்க முடியாது என்று...இல்லை இனி எடுக்கவும் சந்தர்ப்பம் வரவே வராது என்று. ஒவொரு மனிதனின் அடிமனதின் எங்கோ ஒரு மூலையில் நித்யானந்தாக்கள் ஒழிந்தே கிடக்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் அவர்களின் வெளிப்படு திறன் மட்டும் மாறுபடலாம். அவ்வளவே!!!


மனித மனமானது உணர்ச்சிகளின் கலவை. இதுவே இயற்கையின் நியதியும். சந்தர்பங்களில் மனிதன் சறுக்கி விட கூடும்! நீங்கள் தண்டிக்கவும் வேண்டாம், மன்னிக்கவும் வேண்டாம். தப்பானவன் என்று தெரிந்தால் தள்ளி நடவுங்கள். தனிமையே அவனை தண்டிக்கும், மன்னிக்கும், திருத்தும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா....ஒரு மாதிரி ஒரே மூச்சில பதிவு எழுதி முடிச்சாச்சு. ப்ளீஸ் மகா ஜனங்களே உங்களை கெஞ்சி கேட்டுக்கிறன், நம்மளை மட்டும் துவைச்சு காய போட்டிடாதீங்க!!! எவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன? 

"யாதொன்றும் இல்லை நோக்கம் -வலைப் பூவை நிரப்புவதைத் தவிர"      


4 comments:

ரூபன் said...

கலக்குறீங்க குமரேசன்!!!!!!!!!

பொறுக்கி + சுயம்பு said...

மிகவும் நன்றி ரூபன்

கருணையூரான் said...

///என்னை மாதிரியே எத்தினை நாய் நாக்க தொங்க போட்டிட்டு ரசிச்சு பார்த்திருக்கும் தெரியுமா???

///
உந்த படத்தில பெட்டை நாயளும் நாக்கை தொங்க போட்டுட்டு நிக்குது போல
ம்...கலக்கிடிங்க ...

பொறுக்கி + சுயம்பு said...

பெட்டையோ பெடியனோ நாய் தானே ....அதான் தொங்க போட்டிட்டு இருக்கு பாஸ்

Post a Comment