Monday, March 22, 2010

வெட்கம் பூசிய முகம் -அது முழுதும் காதல்



அமைதியாயொரு அந்தி வேளை
ஆரவாரமில்லாமலொரு பூங்கா 
அடர்ந்து படர்ந்தவொரு பூஞ்செடி 
அதன் மறைவிலொரு பைங்கொடி!!!

பாதி மூடிய கண்கள் 
பவள உதட்டிலோ கிறக்க புன்னகை 
சிறிதாய் கலைந்த கூந்தல்
சீரும் சீரில்லாமலுமாய் சுவாசம் 
சிம்பொனியை சீண்டும் சிலிர்ப்பான சிணுங்கல்
வெட்கம் பூசிய முகம் -அது முழுதும் காதல்
வியர்வை குளித்த சங்கு கழுத்து 
நம்பிக்கையில் நழுவிப் போன தாவணி 
உரிமையாய் தழுவும் கைகள்!!!

அடே பாவி 
இவளை போய் படம் எடுத்து 
இன்டர்நெட்டில்...ச்சே
கொடுத்து வசிருக்கணும்டா இவ கூட வாழ
கெடுத்து வச்சிருக்கியேடா இவளோட வாழ்வ!!!

பார்க்கிற நீ இருக்கு மட்டும் -இப்படி 
பரதேசிங்க இங்க இருக்கும் 
ஈனமாய் ஒரு பெண்குரல் எங்கிருந்தோ... 
கூனி குறுகிப் போகிறேன் 
நான்!!!



No comments:

Post a Comment