Thursday, March 18, 2010

அழகே உனக்கோர் ஓர் எச்சரிக்கை


பெண்ணே....
என் 
வாலிபக் கோட்டைக்குள்   
வன்முறைகளைத் தூண்டாதே!!!

இரு 
கரு விழி
சன்னங்கள் கொண்டு -என்
இதயத்தைத்  துளைக்காதே !!!

உன் 
உதட்டோரப் புன்னகையில் 
பூப் பூக்கும் கன்னக்குளியில் -எனை 
காணாமல் போகச் செய்யாதே!!!

எல்லை தாண்டிய பயங்கர வா(வ)தம் இது 
இத்தோடு நிறுத்தி விடு!!!

இல்லையேல்....
காதல் சட்டத்தின் கீழ் கைதாகி 
கம்பி எண்ணுவாய் என் மனச் சிறையில்!!! 

No comments:

Post a Comment